பரிதாபமாக உயிரிழந்த சிறுவன் : ஊரே சோகத்தில்!!

மஸ்கெலியாவில் சுமார் நான்கு வயதான சிறுவனொருவன் சொக்கலெட் (chocolate) என நினைத்து மாத்திரைகளை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவன், தந்தை கொண்டு வந்த பையினுள் சொக்லெட்டுக்களை தேடும் பொழுது சிறுவனது கையில் மாத்திரை கிடைத்துள்ளது. அதனை சொக்லெட் என நினைத்து சிறுவன் உட்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பெற்றோர் சிறுவனை மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கிருந்து கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பின்பு அங்கிருந்து சிறுவன் கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் கண்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் ஸ்ரீ மனோகரன் மர்வின் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.