வவுனியாவில் காணாமல் போன நாம்பன் மாடு பூனாவையில் மீட்பு!!

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் காணாமல் போன நாம்பன் மாடு, மதவாச்சி பூனாவை பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த சிவஞானசுந்தரம் ஸ்ரீதேவி என்பவருடைய 150,000 பெறுமதியான நாம்பன் மாடு 4ஆம் திகதியிலிருந்து காணாமல் போயிருந்தது. இது தொடர்பாக உரிமையாளரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் இன்று வவுனியா பூனாவை பகுதியில் வைத்து நாம்பன் மாட்டினை பொலிஸார் மீட்டதுடன், இது தொடர்பான விசாரணையினை மூவரிடம் மேற்கொண்டு வருகின்றனர்.