மூன்று வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமை!!

மூன்று வயது பெண் குழந்தையொன்றை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குழந்தையின் நெருங்கிய உறவினரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மாத்தளை பதில் நீதவான் வசந்தா தர்மகீர்த்தி இன்று குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வீட்டில் இருந்து காணாமல்போன குழந்தையை கிராமவாசிகள் தேடி சென்றபோது அருகில் உள்ள தேயிலை தோட்டம் ஒன்றில் சந்தேகநபர் நிர்வாணமாக காணப்பட்டுள்ளார்.

அதேவேளை சற்று தொலைவில் குழந்தை இருப்பதை கிராமவாசிகள் கண்டுள்ளனர். குழந்தை வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த கிராமவாசிகள் சந்தேகநபரை கடுமையாக தாக்கி பற்களை உடைத்துள்ளனர்.

இதனையடுத்து கிராமவாசிகள் சந்தேகநபரை மாத்தளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.