பெண்ணிற்கு எமனாக வந்த தென்னங் கொப்பு!!

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், கடுகன்னாவவில் தென்னங் கொப்பு தலையில் வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு கடுகன்னாவ – இலுக்குவத்த, ரம்மலக பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த பெண் ரம்மலக பிரதேசத்தினை சேர்ந்த 45 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது. மேலும், சீரற்ற காலநிலையினால் மக்கள் பெரிதும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், கடுகன்னாவவில் தென்னங் கொப்பு தலையில் வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு கடுகன்னாவ – இலுக்குவத்த, ரம்மலக பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.