80 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை சட்ட விரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பெண் ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
டுபாய் நாட்டில் இருந்து வருகை தந்த போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டார் என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரகாபொலப் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் அவருடைய காற்சட்டையில் தங்க நகைகளை மறைத்து வைத்திருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.