கொழும்பில் பொலிஸாருக்கு பயந்த நபருக்கு ஏற்பட்ட கதி!!

கொழும்பில் பொலிஸாருக்கு பயந்து மாடியில் இருந்து குதித்த நபர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். கொள்ளுப்பிட்டி முகாந்திரம் வீதியிலுள்ள மாடி வீட்டில் இருந்து குறித்த நபர் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவரை கைது செய்ய சென்ற சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சந்தேக நபரை நேற்று கைது செய்ய சென்ற சந்தர்ப்பத்தில் மாடி வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.சந்தேக நபரின் ஒரு காலின் எலும்பு முறிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.