தெற்கு நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்து தடம்புரண்டது ஐவருக்குக் காயம்!!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 121 ஆவது மைல் கல் பகுதியில் கொடகம நோக்கிப் பயணித்த பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அதில் 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் மாத்தறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் கொன்மாதுவ மற்றும் கொடகம பகுதிகளுக்கு இடைப்பட்ட 121 ஆவது மைல் கல் பகுதியில் நடந்தது என்று கொடகமப் பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.