வீதியை விட்டு விலகிய முச்சக்கர வண்டி- சாரதி உயிரிழப்பு!!

திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதி இறக்கக்கண்டி பாலத்திற்கருகில் இன்று காலை  முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. அதில் முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மட்டக்களப்பு .ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த ஹயாத்து முகம்மது மகீன் என்பவர் உயிரிழந்தார்.

முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.