தம்பிமாருடன் குளிக்கச் சென்ற அண்ணனுக்கு நேர்ந்த பரிதாபம்…!! (படங்கள்)

புஸ்ஸல்லாவ – வகுகபிட்டிய பாலவல பிரதேசத்தில் குளிக்கச்சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதே பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய துவான் தில்கான் என்ற இளைஞரே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் இன்று காலை தனது 2 தம்பிகளுடன் ஆறு ஒன்றுக்கு குளிக்கச் சென்றுள்ளார். தம்பிமார்கள் இருவரும் குளித்து விட்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையிலை குறித்த இளைஞன் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராத காரணத்தினால் உறவினர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, இளைஞன் ஆற்றில் சடலமாக கிடப்பதை கண்டு புஸ்ஸல்லாவ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில்இ மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.