30 ஆண்டுகளின் பின் பொதுமக்களின் விவசாயக் குடியிருப்புகளை நோக்கி இரணைமடு நீர்…..!! பெருமகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் ஏற்று நீர்ப்பாசன திட்டம் யுத்தத்தினால் முழுமையாக சேதமடைந்திருந்த நிலையில் புணரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 30 வருடங்களின் பின்னர் இரணைமடு நீர் குடியிருப்பு பகுதியை நோக்கி சென்றுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளனர்.

இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நீர்ப்பாசன வாய்க்கால்களை சோதனையிடுவதற்காகவும், புதிதாக பொருத்தப்பட்ட நீர்பம்பிகளின் இயங்கு நிலையை அவதானிப்பதற்காகவும் இன்று நீர்ப்பாசனம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

.இது தொடர்பில் இந்தப் பகுதி விவசாயிகள் கருத்து வெளியிடும் போது; குறித்த குளத்தின் அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்ட நிதியில் குறித்த ஏற்றுநீர்ப்பாசன திட்டமும் உள்ளடங்குகின்றது.

யுத்தம் காரணமாக கைவிடப்பட்ட ஏற்று நீர்ப்பாசன விவசாய செய்கை அடுத்த வருடம் முதல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.