கொழும்பில் ஏற்பட்ட கோர விபத்து! நேருக்கு நேர் மோதிய திகில் காட்சி (வீடியோ)

கொழும்பை அண்மித்த நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் நபர் ஒருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

கடவத்தை அதிவேக நெடுஞ்சாலைக்கு செல்லும் பகுதியில் நேற்று பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியும், மோட்டார் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி கொண்டமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

முச்சக்கர வண்டியின் சாரதி போக்குவரத்து விதிகளை மீறியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்துள்ளார். அவரது இரு கால்களும் மோசமாக பாதிப்படைந்துள்ளது.

“எனது மூன்று பிள்ளைகளை நான் எப்படி இனி மேல் பார்த்து கொள்வேன்” என முச்சக்கர வண்டியின் சாரதி அவ்விடத்திலேயே கத்தி அழுதார் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.