திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற 12 பேருக்கு நேர்ந்த கதி!

தம்புள்ளை – அனுராதபுரம் பிரதான வீதியில் புலாகல பிரேதேசத்தில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த மின்மாற்றியில் மோதி இன்று (17) காலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் வானில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் படுகாயடைந்து, தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு படுகாயடைந்தவர்கள் வெலிமட, பொரலன்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

திருமணத்திற்காக பெண் ஒருவரை பார்ப்பதற்காக இவர்கள் வெலிமடயில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.சாரதியால் வேனின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால், வேன் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின்மாற்றியில் மோதி பின்னர் வயல் வௌியில் விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்களை பிரதேசவாசிகள் வைத்தியசாலைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.சம்பவத்தில் படுகாயடைந்த 12 பேரில் 8 பெண்கள் 4 ஆண்கள் உட்பட சிறுவர்கள் இருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.