மானிப்பாய் அந்தோனியார் ஆலய தேர்ப் பவனியின் போது என்பன நேற்றுத் திடீரென்று வீழ்ந்து உடைந்துள்ளது.
இந்தச் சம்பவத்தால் பக்தர்கள் கதறி அழுதனர். இந்தச் சம்பவத்தால் அவர்களிடம் மனக்கிலேசமும் ஏற்பட்டது.
மானிப்பாய் அந்தோனியார் ஆலயத் தேர்ப் பவனி நேற்று இடம்பெற்றது. தேரில் அந்தோனியார் மற்றும் குழந்தை யேசுவின் சொரூபம் என்பன எடுத்துவரப்பட்டன.
தேர்ப் பவனியின் இறுதிக் கட்டத்தில், ஆலயத்தின் பிரதான வாயில் ஊடாகத் தேர் உள்நுழையும்போதே அந்தோனியார் மற்றும் குழந்தை யேசுவின் சொரூபங்கள் வீழ்ந்து உடைந்துள்ளன. அவற்றின் தலைப் பகுதி மாத்திரமே வீழ்ந்து உடைந்துள்ளது.
வீதியில் உள்ள இறக்கம் காரணமாகவே தேர் சரிந்து, இவை வீழ்ந்து உடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. உடனடியாகவே, சொரூபங்கள் ஆலயத்தினுள் எடுத்துச் செல்லப்பட்டன.
இதன் பின்னர் ஆலயத்தினுள் இருந்த மற்றொரு சொரூபம் கொண்டுவரப்பட்டு ஆசீர்வாதம் வழங்கப்பட்டபோதும், பக்தர்கள் பெரும் சோகத்துடனேயே வெளியேறினர்.