தனக்கு தானே நெருப்பு மூட்டிக் கொண்ட நபர் : யாழில் சம்பவம்!! (படங்கள்)

யாழ். ஐந்து சந்தி பகுதியில் நபரொருவர் தனக்கு தானே நெருப்பு மூட்டிக் கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், 55 வயதான நபரொருவரே வீட்டில் வைத்து நெருப்பு மூட்டிக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தையடுத்து குறித்த நபரை அயலவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.