நிறுத்தப்பட்டிருந்த கப்பலுக்கு தீ வைப்பு : காங்கேசன்துறையில் பதற்றம்!! (படங்கள்)

காங்கேசன்துறை, மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் இனந்தெரியாத விஷமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இந்த தீ வைப்புச் சம்பவம் இன்று(18.06) காலை இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது.

தீயை கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய இணைப்பு

மயிலிட்டி துறைமுகத்துக்கு ண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீ பற்றிக் கொண்டுள்ளது. அந்தக் கப்பல் தொடர்ந்தும் எரிந்து கொண்டிருக்கிறது. வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் கப்பல் தீப்பற்றியது என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து கடற்படை தீ அணைக்கும் பிரிவினர் தீயை கட்டுப்பட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கின்ற போதும், கப்பலின் இயந்திரப் பகுதி கடுமையாக தீ பற்றியதால் அங்குள்ள டீசல் தாங்கி என்பன உள்ளதால் தீ தொடர்ந்து எரிகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் கப்பல் வெடிக்கும் அபாயம் உள்ளது.

திருத்த வேலை காரணமாக கடந்த ஒரு வருடமாக குறித்த கப்பல் அந்தப் பகுதியில் நங்கூரம் இடப்பட்டிருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.