மல்லாகம் இளைஞரின் உடல் அமைதியாக நல்லடக்கம்

மல்லாகத்தில் பொலிஸாரின் துப்பாக்கிக் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் உடல் இன்று அமைதியான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதிக்கிரியைகள் மல்லாகம், குளமன்காலில் உள்ள அவரது உடன்பிறவாச் சகோதரனின் இல்லத்தில் நேற்று மாலை 3 மணியளவில் நடைபெற்றன.

பி.ப. 4.15 மணியளவில் அங்குள்ள தேவாலயம் ஒன்றில் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.