வவுனியா வேப்பங்குளம் பகுதி கிணற்றில் இளைஞனின் சடலம்!

வவுனியா வேப்பங்குளம் பகுதி கிணற்றில் இளைஞனின் சடலம் !

இச்சம்பவம் இன்று(20.06.2018) காலை 10மணியளவில் இடம்பெற்றுள்ளது வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையில் உள்ள மைதானத்தில் இருக்கும் கிணறு ஒன்றில் மகாறம்பைகுளம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய அனோஜன் (டிலக்சன்) இளைஞனே மேற்படி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

குறித்த இளைஞன் மகாறம்பைகுளம் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தவரென்றும் நேற்று மாலை வேப்பங்குளம் பகுதியில் உள்ள அவர்கட்கு சொந்தமான காணி ஒன்றை பார்வையிட்டு வருவதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்ட இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அறியப்படுவதுடன் நேர ற்றையதினம் வீட்டில் குடும்பத்தாருடன் முரண்பட்டு வெளியில் வந்தவர் என்றும் அறியப்படுகிறது

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை கிணற்றிலிருந்து வெளியில் எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

குறித்த நபர் தற்கொலை செய்துள்ளாரா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுத்துச்செல்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்