புதுக்குடியிருப்பு , ஆனந்தபுரத்தில் குண்டு வெடிப்பு

புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் கிழக்கில் இன்று குண்டுகள் சில வெடித்து சிதறியதில் அங்கே பதற்றநிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தனியார் ஒருவர் தனக்கு சொந்தமான காணியைத் துப்பரவு செய்து தீமூட்டிய போதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

2009 ஆம் ஆண்டு இறுதி போரின் போது படையினரால் கைவிடப்பட்ட வெடிபொருட்களே இவ்வாறு வெடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.