பெண் ஆசி­ரி­யயை துரத்திய பதில் அதிபரால் பரபரப்பு!!

காரை­ந­க­ரில் பாட­சா­லை­யில் பதில் கடமை புரி­யும் அதி­பர் ஒரு­வர், பாட­சா­லை­ ஆசி­ரி­ய­ரின் கையைப் பிடித்து இழுத்­துச் சென்று துரத்­தி­யுள்­ளார்.

இந்­தச் சம்­ப­வம் நேற்று இடம்­பெற்­றுள்­ள­தாக ஊர்­கா­வற்­து­றைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

காரை­ந­க­ரி­லுள்ள பாட­சா­லை­யின் அதி­பர் அண்­மை­யில் ஓய்­வு­பெற்­றுள்­ளார். மூப்பு அடிப்­ப­டை­யில் அங்­குள்ள ஆசி­ரி­யர் ஒரு­வரே பதில் அதி­ப­ரா­கப் பணி­யாற்றி வரு­கின்­றார்.

அதி­ப­ரா­கக் கட­மை­யாற்றி வரும் ஆசி­ரி­ய­ருக்­கும், அங்கு பணி­யாற்­றும் பெண் ஆசி­ரி­ய­ருக்­கும் இடை­யில் வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டுள்­ளது.

வாக்­கு­வா­தம் முற்­றிய நிலை­யில், அதி­ப­ரா­கக் கட­மை­யாற்றி வரும் ஆசி­ரி­யர், பெண் ஆசி­ரி­ய­ரின் கையைப் பிடித்து இழுத்­துச் சென்று பாட­சாலை கேற்­றின் வெளியே விட்­டுள்­ளார்.

ஒரு­மை­யில் அந்­தப் பெண் ஆசி­ரி­ய­ரை­யும் பேசி­யுள்­ளார். இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் பெண் ஆசி­ரி­யர் ஊர்­கா­வற்­று­றைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­துள்­ளார்.