மாணவிகளுக்கு பாலியல் ரீதியான பகிடிவதை!

லபுதுவ உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் விவசாய பீடத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் புதிய மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக பகிடிவதை கொடுத்ததாக கூறப்படும் 4 மாணவிகளையும் ஒரு மாணவரையும் கைதுசெய்துள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதிய மாணவிகளுக்கு பாலியல் ரீதியான பகிடிவதை கொடுக்கப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இந்த மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மாணவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

விடுதியில் தங்கியிருந்த மாணவிகளே பாலியல் ரீதியான பகிடிவதை உள்ளாக்கப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மாணவிகளும், மாணவரும் காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.