ஆயிரக்கணக்கானோருக்கு மத்தியில் தீயில் இறங்கிய சிறுவர்கள்!!

காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. ஆலய பூசகர் கு.லோகேஸ் தலைமையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இந்த நிகழ்வு சிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ மிதிப்பு நிகழ்வில் பெரியவர்களுடன், சிறுவர்களும் இணைந்து தீயில் இறங்கிய காட்சியானது அனைவரது கவனத்தையும் பெற்றிருந்தது.

இதேவேளை ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு சடங்கு கடந்த 13ஆம் திகதி கடலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.