திருவிழாவிற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை! தவிக்கும் குடும்பம்

மட்டக்களப்பில் ஆலய திருவிழாவிற்கு சென்ற நபரொருவர் திரும்பி வராத நிலையில் இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

களுதாவளை பிரதான வீதி – 04ஆம் பிரிவை சேர்ந்த 60 வயதுடைய கணபதிப்பிள்ளை சாமித்தம்பி கடந்த திங்கட்கிழமை (18) களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலய திருவிழாவிற்கு சென்றுள்ளார்.

எனினும் அன்றைய தினம் முதல் அவர் வீடு திரும்பவில்லை எனவும், அவரை பல இடங்களில் தேடியும் அவரின் தொடர்பு கிடைக்கவில்லை என்றும் உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் இவரை கண்டவர்கள் 0752949514, அல்லது 0755254656 என்ற தொலை பேசி இலக்கங்களுக்குத் தகவல் தருமாறு குறித்த நபரது குடும்பம் கோரியுள்ளது.