கொழும்பு சென்ற ரயிலில் பாய்ந்து நபர் ஒருவர் தற்கொலை!!

கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் பாய்ந்து நபர் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ரயில் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

178 ஆம் மைல் கல்லுக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், அதற்கான காரணம் இன்னமும் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லுனுகல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான அமரசிங்க ஆராச்சிலாகே விக்ரமநாயக்க என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.