இலங்கைக்கு திரும்பிய இளைஞர் வீடு சேரும் முன்னரே நடந்த சோகம்..!!

வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக நாடு திரும்பியிருந்த இளைஞர் ஒருவர் வீடுபோய்ச் சேர முன்னர் பேருந்து விபத்தில் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் தம்புள்ளைப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

சவுதியில் பணியாற்றும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று மாலை விடுமுறையில் நாடு திரும்பியுள்ளார்.இதனையடுத்து ஊருக்குச் செல்வதற்காக கொழும்புலிருந்து மட்டக்களப்பு வீதி ஊடாக அக்கரைப்பற்று செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றில் ஏறியுள்ளார்.

இந்த நிலையில், தம்புள்ளை அருகே உள்ள உணவகம் ஒன்றில் தேநீர் அருந்த நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் புறப்படத் தயாராகி சாரதி பேருந்தைப் பின்னோக்கிச் செலுத்தியுள்ளார்.

இதன்போது அவசரமாக வண்டியில் ஏற முற்பட்ட குறித்த இளைஞர், பேருந்துக்கும், அங்கிருந்த மரம் ஒன்றுக்கும் இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.