யாழில் சிறுமி கொலை : 17 வயது இளைஞர்கள் இருவர் கைது!!

யாழ்ப்பாணம் – சுழிபுரத்தில் கழுத்து நெரிக்கப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சிறுமியின் கொலையுடன் நேரடியாக தொடர்புடைய 17 வயதான இளைஞர்கள் என வடக்கு பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த 27ஆம் திகதி 6 வயதான மாணவியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பபட்ட 22 வயதுடைய இளைஞர் சிறுமியின் உறவினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 25ஆம் திகதியின் சிறுமியின் சடலம் கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்நிலையல் பொலிஸார் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.