திருமணமான இரண்டே நாட்களில் பலியான இளைஞன்….!!

மாத்தறை – வெலிகமை ஹேன்வல பிரதேசத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெலிகமை தப்பரதொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த இளைஞன் இரண்டு நாட்களுக்கு முன்னரே திருமணம் செய்து கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற மற்றுமொரு நபர் படுகாயமடைந்த நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து சம்பவம் குறித்து வெலிகமை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்