யாழ் கோட்டையை இராணுவத்திடம் தாரை வார்ப்பதற்கு எதிராக போராட்டம்!

தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமான யாழ் கோட்டைக் காணியை இராணுவத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அங்கு இராணுவ முகாம் அமைக்கப்படக் கூடாதென வலியுறுத்தியும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெறவுள்ளது.

நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 2 மணிக்கு கோட்டையின் தெற்கு வாசல் பக்கமாக குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது.

இராணும் முகாம் அமைப்பதை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி நடைபெறுகின்ற இப் போராட்டத்திற்கு சகலரையும் கலந்து கொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.