வவுனியாவில் இரும்புப் பெட்டகம் மீட்பு

வவுனியா மரக்காரம்பளைப் பகுதியில் இருந்து இரும்பெட்டகம் ஒன்று மீட்கப்பட்டது. நேற்று மரக்காரம்பளைப் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்தே மீட்கப்பட்டது.

இனம் தெரியாத நபர்களால் நிலத்தைத் தோண்டும் போதே பெட்டகம் மீட்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் இரும்பு பெட்டகம், அதனை தூக்கிச் செல்லப் பயன்படும் சட்டகம் ஒன்றையும் மீட்டுள்ளனர்.

மேலதிக விசரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.