ஒரு தொகை மீன்களுடன் பிடிபட்ட இந்திய மீனவர்கள் – படகு மற்றும் உபகரணங்களும் பறிமுதல்!! (படங்கள்)

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நான்கு பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

நெடுந்தீவுக்கு அண்மித்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட மீனவர்களின் படகு மற்றும் சட்ட விரோத மீன்பிடி உபகரணங்களும், அவர்களால் பிடிக்கப்பட்ட மீன்களும் கைப்பற்றப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள், யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்களத்தினரிடம் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.