அதிகாலை நடந்த கோர விபத்து- சிறுவன் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு- அறுவர் படுகாயம்!!

வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகம் முன்பாக இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் சிறுவன் உள்ளிட்ட இருவர் உயிரிழந்ததுடன், அறுவர் படுகாயமடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பிருந்து ஏறாவூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த வான்,் வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகம் அண்மித்த பகுதியில், வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

அதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.