ஆற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு!! (படங்கள்)

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெசல்கமுவ ஓயாவிற்கு நீர் வழங்கும் கிளை ஆறான சென். ஜோன்டிலரியிலிருந்து பெண்ணொருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆற்றில் சடலமொன்று கிடப்பதாக அப்பகுதியிலுள்ள தேயிலைமலைக்கு சென்று கொண்டிருந்த தொழிலாளர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

30 அல்லது 35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரது சடலமே மீட்கப்பட்டுள்ளதாகவும், எனினும் இது தொடர்பில் மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.