வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக அமர்ந்து போராடும் ஆசிரியை!!

யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாகப் பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆளுநரைச் சந்திப்பதற்கு அனுமதி கோரிய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் வாசலில் அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.ஆசிரியராகக் கடமையாற்றிய குறித்த பெண், தனக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவையை பெற்றுத் தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் எனத் தெரியவருகிறது.