கடமையின் போது உயிர் நீத்த -உப பொலிஸ் பரிசோதகருக்கு வீடு!!

பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது, போரின் தாக்குதலில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் சிற்றம்பலம் தவராசாவின் குடும்பத்துக்கு அமைக்கப்பட்ட வீடு இன்று கையளிக்கப்பட்டது.

காங்கேசன்துறை சோதி வீதி, தையிட்டிப் பகுதியில் இந்த வீடு அமைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டப் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இந்த வீடு அமைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.