வீதியில் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்! யாழில் சம்பவம்

வீதியில் சென்ற பெண்ணின் 10 பவுண் தாலிக் கொடிய கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் வந்தவர் தாலிக் கொடியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, சித்தன்கேணியில் நடந்துள்ளது.

இது தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.