வடக்கு மாகாண சபை உறுப்பினரின் -தாயார் வீட்டில் கொள்ளை!!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடியிலுள்ள வடக்க மாகாண சபை உறுப்பினரின் தாயாரின் வீட்டில் நேற்று நள்ளிரவு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அங்கிருந்து 6 பவுண் நகை மற்றும் உண்டியலில் சேர்க்கப்பட்ட 40 ஆயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.

சுமார் 45 நிமிடங்கள் வீட்டுக்குள் தேடுதலில் ஈடுபட்ட கொள்ளையர்கள், 3 தொலைபேசிகளை அடித்து உடைத்ததுடன், மோட்டார் சைக்கிளின் கண்ணாடிகளையும் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தனின் தாயாரின் வீட்டிலேயே கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.