மனைவி, பிள்ளைகளிற்கு கணவன் செய்த காரியம்!

மனைவி, பிள்ளைகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் காயப்படுத்திய குடும்பத் தலைவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் நேற்று உத்தரவிடப்பட்டது.

சாவகச்சேரியைச் சேர்ந்த குடும்பப் பெண் மறும் அவரது இரண்டு பிள்ளைகளும் இவ்வாறு தாக்கப்பட்டு சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மனைவி கொடுத்த முறைப்பாட்டினையடுத்து சாவகச்சேரிப் பொலிஸார் குறித்த நபரைக் கைது செய்து நீதிமன்றப் பதில் நீதிவான் செ.கணபதிப்பிள்ளை முன்னிலையில் நேற்று முற்படுத்தினர்.