இவரை தெரிந்தால் உடன் அறிவியுங்கள் : அவசர கோரிக்கை!!

கட்டார் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற பெண் ஒருவரை காணவில்லை எனவும் அவர் தொடர்பான தகவல்கள் தெரியுமெனின் உடன் அறியத்தரவும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.

கிண்ணியா பகுதியை சேர்ந்த ஏ.எம்.ரஷினா என்ற பெண் கடந்த 2003ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25ஆம் திகதி கட்டார் நாட்டிற்கு தொழில் வாய்ப்பு பெற்று சென்றுள்ளார்.

இந்நிலையில், அவர் சென்ற நாள் முதல் இன்றுவரை எந்தவித தொடர்புகளும் கிடைக்கப்பெறவில்லை என அவரின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

அவர் கட்டாருக்கு சென்று 15 வருடங்கள் ஆகின்ற நிலையில் அவர் தொடர்பில் தகவல் அறிந்தால் 0112 864136 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், குறித்த பெண் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.