நீதிமன்ற அறையில் பாதுகாக்கப்படும் மனித எலும்புகள்- மன்னாரில் தொடரும் அகழ்வு!!

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அகழ்வுப் பணியின் போது மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் பெட்டிகளில் அடைக்கப்பட்டு பாதுகாப்பாக மன்னார் நீதிமன்றிலுள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய கட்டுமானப் பணியின் போது மேற்கொள்ளப்பட்ட மண் அகழ்வின் போது கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து, இது சம்பந்தமாக சட்ட ரீதியான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இதுவரை 40 க்கு மேற்பட்ட எலும்புக்கூடுகளும், மண்டையோடுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.