இலங்கையில் இப்படியொரு அவல நிலையா : சமூக வலைத்தளங்களில் வெளியான காட்சியால் அதிர்ச்சி!!

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டமையால் பல்வேறு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

கோளாறு காரணமாக பிரதான ரயில் வீதியில் வேறு ரயில்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அலுவலகம் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இன்று அதிகாலை அம்பேபுஸ்ஸ பிரதேசத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில் வீதியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் கோளாறு ஏற்பட்ட ரயில் சீர்செய்யப்பட்டு மீண்டும் பயணத்தை ஆரம்பித்தது. இதன்போது ஏனைய ரயில்களில் பயணிக்க காத்திருந்தோரும் இதே ரயில் பயணித்துள்ளனர்.

ரயிலின் இயந்திரம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் ஏறியிருந்து பயணத்தை மேற்கொண்டனர்.

மிகவும் ஆபத்தான முறையிலும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையிலும், மக்கள் ரயிலில் பயணித்த புகைப்படங்கள் சில ஊடகங்களில் வெளியாகியுள்ளன.