பாட்டியுடன் தங்கியிருந்த சிறுமிக்கு – இளைஞன் செய்த காரியம்!!

15 வயதுடைய சிறுமி ஒருவரை அடிக்கடி பாலியல் துஷ்பிரயோகம் செய்த 19 வயதுடைய இளைஞனை மாதம்பை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாதம்பை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனன்குளம், வாளஹேன பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளான்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வந்ததாகவும், குறித்த சிறுமியின் தாய் மற்றும் தந்தை வேறு திருமணம் செய்து கொண்டு பிரிந்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரான இளைஞனுக்கும் குறித்த சிறுமிக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாட்டி வீட்டில் இல்லாத சந்தர்ப்பங்களில் குறித்த இளைஞன் வீட்டிற்கு வந்து செல்வதாக பாட்டிக்கு தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியிடம் பாட்டி விசாரித்த போது, சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்தமை தெரிய வந்துள்ளது.

பின்னர் பாட்டி சிறுமியையும் அழைத்துச் சென்று மாதம்பை பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

6 மாத காலங்களாக தானும் சந்தேக நபரான இளைஞனும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாக குறித்த சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுமியை வைத்திய பரிசோதனைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.