வீடுகளின் மீது சரிந்து வீழ்ந்து மரம்-!!

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்புள்ள கீழ்பிரிவு தோட்டத்தில் உள்ள குடியிருப்பில் மரம் சரிந்து வீழ்ந்தது.

இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது.

கடும் மழையுடன் வீசிய பலத்த காற்றின் காரணமாக, குடியிருப்பிற்கு அருகில் இருந்த மரம் சரிந்து வீட்டின் கூரை மீது விழுந்துள்ளது.

இதில் ஒரு வீடும், மற்றொரு வீட்டின் சமையலறையும் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், வீடுகளிலிருந்த சில பொருள்களும் சேதமடைந்துள்ளன.