கடன் தொல்லையால் இளம் பெண் ஒருவர் எடுத்த விபரீத முடிவு!!

சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி, பலவெளிக்கிராமத்தில் நுண்கடன் அறவீடு செய்பவர்களின் அச்சுறுத்தலினால் இளம் பெண் ஒருவர் அலரி விதை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த பெண் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பலவெளிக்கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான நாகராசா – பிரசாந்தினி (வயது-24) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் மூன்றுக்கும் மேற்பட்ட நுண்கடனை எடுத்துள்ளார். நுண்கடனை மீள செலுத்த முடியாமலும், நுண்கடன் அறவீடு செய்பவர்களின் அச்சுறுத்தல் காரணமாகவும் விரக்தியடைந்து, மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலே அலரிவிதைகளை உட்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அலரி விதையை உட்கொண்ட நிலையில்குறித்த பெண் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இவர் நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.