யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!!

மோட்டார்சைக்கிளில் வந்த குழுவொன்று யாழ். வண்ணார் பண்ணையிலுள்ள வீடொன்றின் மீது தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும், வீட்டின் கதவு, ஜன்னல் கண்ணாடி என்பவற்றை உடைத்து விட்டு பெற்றோல் குண்டை வீசியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுமார் எட்டு பேரை கொண்ட கொண்ட குழுவொன்று ஆயுதங்களுடன் வண்ணார் பண்ணை, தாமரை வீதியிலுள்ள வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து வீட்டிலிருந்தவர்கள் கூக்குரலிட வீட்டிற்குள் பெற்றோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.