துரத்தித் துரத்திக் கொட்டிய குளவிகள்- சிதறியோடிய மாணவர்கள், ஆசிரியர்கள்!!

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் இன்று அதிகாலை பெரிய குளவிக்கூடு கலைந்தது. 45 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை குளவிகள் துரத்தித் துரத்திக் கொட்டின எனத் தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை கட்டத்தில் இருந்த கூடு கலைந்துள்ளது. 43 மாணவர்களை குளவிகள் கொட்டியுள்ளன. அதில் பாதிப்படைந்த ஆசிரியர் உள்ளிட்ட மாணவர்கள் 11 பேர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.