பெண்ணின் தொலைபேசியில் உரையாடலால் யாழில் நடந்த விபரீதம்!

மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு காயமடைந்த 11 வயது மாணவன் 3 பற்களை இழந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

சிறுவனை மோட்டார் சைக்கிளால் மோதிய பெண் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம், மிருசுவில் தவசிகுளத்தைச் சேர்ந்த 11 வயது மாணவன், தனியார் கல்வி நிலையத்திற்குச் செல்வதற்காக சாலையோரத்தில் சைக்கிளுக்கு காற்றடித்துக் கொண்டிருந்த வேளையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் தொலைபேசியில் உரையாடியவாறு வந்த பெண், மாணவனை மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மாணவன் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.