யாழ் கல்வியங்காடு கட்டைப்பிராயில் கோர விபத்து!!

யாழ் பருத்தித்துறை வீதி கட்டைப்பிராயில் சற்று முன்னர் கோர விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ் பருத்தித்துறை வீதி கட்டைப்பிராய் மூன்றாம் கட்டையில் இன்று பிற்பகல் 2:50 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வளைவு ஒன்றிலிருந்து வந்து பிரதான வீதிக்கு திரும்ப முயன்ற ட்ரக்ரர் வண்டியுடன் எதிரில் வந்த மினி பஸ் மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தொடர்பில் விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.