கூரையை பிய்த்துக்கொண்டு வீட்டினுள் விழுந்த யானை!!

தமிழகம் – நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு குட்டி யானை உள்ளே விழுந்ததால் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணும் அவரது கைக்குழந்தையும் காயமடைந்துள்ளனர்.

தமிழகம் – நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு குட்டி யானை உள்ளே விழுந்ததால் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணும் அவரது கைக்குழந்தையும் காயமடைந்துள்ளனர்.

குட்டி யானை, அங்கு அமைந்துள்ள வீடொன்றின் கூரை மேல் ஏறி விளையாடும்போது பாரம் தாங்காமல் கூரையைப் பிய்த்துக்கொண்டு உள்ளே விழுந்துள்ளது.

இதில், பிறந்து 45 நாட்களே ஆன குழந்தை, அவரது தாயார் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் வெளியே இருந்த யானைகள் வீட்டின் கதவை உடைத்து குட்டி யானையைக் கூட்டிச் சென்றன.