முகமாலையில் கண்ணிவெடி வெடித்தமையால் பதற்றம்!

முகமாலைப் பகுதியில் ஏற்ப்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் கடுகாயமடைந்துள்ளார்.

இன்று காலை இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டாஸ் நிறுவனத்தின் தொழிநுட்ப உதவியாளர் ஒருவரே சம்பவத்தில் காயமடைந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர் பளை வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கண்ணிவெடி ஒன்றை செயலிழக்கச் செய்யும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.