யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு வாள்வெட்டுக் குழுவினர் பெரும் அட்ட காசத்தில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரத்தில் அடுத்தடுத்து அவர்கள் கொள்ளையிலும் வழிப்பறியிலும் தாக்குதலிலும் ஈடுபட்டுவிட்டுப் பொலிஸாரிடம் பிடிபடாமல் தப்பியோடி உள்ளனர்.
மானிப்பாயில் இருந்து அரியாலை வரை இவர்களுடைய அட்டகாசம் பதிவாகியது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தொடர்ச்சியாகவே வாள்வெட்டுக் குழுவினர் என்று தெரிவிக்கப்பட்டு பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று இரவு அவர்களுடைய அட்டகாசம் யாழ்ப்பாணத்தில் எல்லை மீறியது.
சிறிய வர்த்தகர்களை இலக்கு வைத்து அவர்களை மிரட்டிக் கப்பம் பெற்றுள்ளனர். மானிப்பாயில் ஆரம்பித்த இந்தக் கொள்ளை அரியாலை வரை நீடித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
நான்கு மோட்டார் சைக்கிள்களில் மழை அங்கி அணிந்தவாறும், முகத்தை மூடிக்கட்டியவவாறும் வந்த 6பேரே இந்தப் பாதகச் செயலில் ஈடுபட்டனர். வர்த்தக நிலையங்களை மூடும் நேரம் உள்புகுந்து உரிமையாளர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்.
மானிப்பாயில் வீதியில் சென்ற ஒருவரிடம் இந்தக் கும்பல் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றது. வர்த்தகர்கள் சிலரை மிரட்டிப் பணம் பறித்தனர்.
அதையடுத்து கோண்டாவிலிலும் வீதியில் சென்ற ஒருவரிடம் வாள்களைக் காட்டி மிரட்டி சங்கிலி பறித்தனர்.
தொடர்ந்து யாழ்ப்பாணம் முடமாவடிச் சந்தியில் உள்ள வர்தகர் ஒருவரிடம் சுமார் 25 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது, நேற்று முழுவதும் வியாபாரம் செய்த பணம் அப்படியே கொள்ளையிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிறிது நேரத்திலேயே அரியாலை புங்கன்குளம் பகுதியில் உள்ள வர்தக நியையத்தில் புந்த குழும்பல் அங்கும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது. அங்கிருந்த இளைஞர்களுக்கும் குறித்த வாள்வெட்டுக் கும்பலுக்குமிடையே மோதல் ஏற்ப்பட்டது.
இதில் சில இளைஞர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து தெல்லிப்பழையில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த பெண்ணை வாளினால் வெட்டிக் காயப்படுத்த முயன்றது. ஆனால் அவர் சமயோசிதமாகத் தப்பினார்.
எனினும் வீட்டிலிருந்த மற்றும் இருவருக்கு கேபிள்களால் தாக்கியத்தில் அவர்கள் காயமடைந்தனர். அயலவர்கள் ஒன்றுகூடியதும் வாள்வெட்டுக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. ஓடும்போது ஒரு வாளையும் கைவிட்டுச் சென்றுள்ளது.
அந்த வீட்டிலிருந்த ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கியதுடன் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பொருள்களையும் அடித்துச் சேதமாக்கியுள்ளது.
சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. அனைத்தும் நறைவடைந்த பின்னர் அவர்கள் சம்பவ இடங்களுக்குச் சென்றனர். இங்கு விசாரணைகளை மேற்கொண்டனர். எனினும் நள்ளிரவு வரை எவரும் கைது செய்ய்பபடவில்லை.
யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டுக் குழுவினருடைய அட்டகாசம் அதிகரித்திருப்பதை அடுத்து அண்மையில் சட்டம் ஒழுங்கு அமைச்சர், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் நேரில் இங்கு வருகை தந்து நிலமை குறித்து நேரில் ஆராய்ந்து சென்றனர். அதன் பின்னரே இந்த அட்டகாசம் இடம்பெற்றுள்ளது.