தொடருந்து மோதி- காவலாளி உயிரிழப்பு -மன்னாரில் சம்பவம்!!

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தொடருந்தில் மோதி புகையிரதக் கடவையில் இரவு நேரக் காவலாளியாக கடமையாற்றிய ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் மன்னார் உயிர்த்தராசன் குளம் கஞ்சித்தாழ்வுப் பகுதியில் நேற்றிரவு நடந்துள்ளது.

தகவலறிந்த முருங்கன் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தை மீட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.